ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

துளிகள் - 2 - விஷ்ணு ஸஹஸ்ரநாம உண்மை!

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் "ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே!" என்கிற இரண்டு வரிகளை பத்து முறை சொன்னால், விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும் என்பார்கள்! என்ன காரணம்?


சித்தர்கள் கூற்றின் படி, இந்த இரண்டு வரிகள் உடலை உள்ளிருந்து சுத்தம் பண்ண உதவுகிறது. எப்படி?


இந்த ஸ்லோகத்தை சொல்லும் பொழுது மூக்கின் அடியில் ஒரு விரலை குறுக்காக வைத்துப் பார்த்தால், மூச்சு காற்று மூக்கு வழி வெளியே வராது என புரியும்? அப்படியாயின் என்ன நடக்கிறது.


மந்திரம் கூறும் பொழுது வாய் வழியே உள்ளிருந்து அதிகப்படியான அளவில் வாயு வெளியே செல்கிறது. அதுவும் உடல் உபயோகித்து வெளியேற்றுகிற கார்பன் டை ஆக்சைடு. உடலும் ரத்தமும் சுத்தப்படுத்தப்படுகிறது. இதனால் அனைத்தும் தெளிவாகும்.


மந்திரம் வழி நம் முன்னோர்கள் ஒரு பயிற்சியை எப்படி தலைமுறைக்கு அளித்தார்கள் என்பதற்கு இது ஒரு நற்சான்று


வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

துளிகள் - 1 - இறை தரிசனம்!

 
மனிதன் இறை தரிசனத்துக்கு ஆசைப்படுவது தவறு. அது இயல்பானது என்றாலும் இரு விஷயங்களை புரிந்து கொள்ளல் வேண்டும். தரிசனம் பெற்ற அந்த நொடியில் அந்த மனிதனுக்கு இரு நிகழ்வுகளில் ஒன்று நடை பெறலாம்.  ஒன்று, அந்த நொடியே பிராணனை இறை எடுத்து சென்றுவிடும். இரண்டு, இரு கண்களும் குருடாக போய்விடும்!, மீதம் இருக்கும் வாழ்க்கை முழுவதும் பார்வை இன்றி வாழ்ந்து முடிக்க வேண்டும்!

இறை தரிசனத்தில் ஒரு விதிவிலக்கும் உண்டு. இறையே விரும்பி, தன்னை குறுக்கிக் கொண்டு, மென்மையாக தரிசனம் கொடுத்தால், மேல் கூறிய இரு இழப்பின்றி அருளுடன் வாழலாம்! 

வாக்குரைத்தது -அகத்தியப்பெருமான்!