சனி, 20 ஜூன், 2026

துளிகள் - 16 - அன்னம் உண்ணும் போது தெய்வங்களை விருந்தாளியாக அழைக்கும் சூட்சுமம்!


அன்னம் உண்ணும் போது கிழக்கு அல்லது மேற்கை நோக்கி அமர்ந்து அன்னபூரணி தாயை தியானித்து, இஷ்ட தெய்வங்களை அழைத்து உடலுக்குள் அமரச் செய்து, மௌனம் கடைப்பிடித்து, இந்த அன்னமானது நல்ல எண்ணங்களைத் தரட்டும், நல்லதைச் செய்கிற சக்தியைத் தரட்டும், தெளிவைத் தரட்டும், ஞானத்தைத் தரட்டும், ஆரோக்கியத்தைத் தரட்டும் என வேண்டிக்கொண்டு தொடர்ந்து உண்டு வந்தால், விருந்தாளியாக அழைக்கப்பட்ட தெய்வம்கூட உள்ளுக்குள் இருந்து அன்னம் உண்பதை நம் மனக்கண்ணில் அல்லது நமது தியானத்தில் சில நாட்களில் காணலாம். அது மிகப் பெரிய ஒரு பாக்கியம் எனக் கூற வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக