வெள்ளி, 17 ஜூலை, 2026

துளிகள் - 25 - நல்லதைச் செய்யும்போது மனக்குழப்பம் வந்தால், பாவம் இன்னும் குறையவில்லை என்று பொருள்!


யார் என்ன கூறினாலும் மனக்குழப்பம் அடையாமல் நாங்கள் முன்பே கூறியது போல், தவறை செய்கின்ற மனிதன் தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து, பாவத்திற்கு மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் யார் சொன்னாலும் கேட்கிறானா ? யார் சொன்னாலும் தன்னை மாற்றிக்கொள்கிறானா ? தவறு செய்கின்ற மனிதனுக்கு இருக்கின்ற உறுதி ஏனடா நல்லது செய்கின்ற மனிதனுக்கு இல்லாமல் போகிறது ? ஏன் தடுமாற்றம் வருகிறது ? ஏன் குழப்பம் வருகிறது ? அங்கு இப்படி கூறுகிறார்கள், இங்கு இப்படி கூறுகிறார்கள், இதை இப்படி நம்பவேண்டும், அதை அப்படி நம்பவேண்டும், இங்கு கூறுவதையெல்லாம் ஏற்க முடியவில்லை என்றெல்லாம் ஏன் குழப்பம் வருகிறது ? குழப்பம் வருகிறது என்றாலே பாவங்கள் இன்னும் இருக்கிறது என்பதுதான் பொருள். எனவே தொடர்ந்து அறவழியில். சத்யவழியில் அனைவரும் வர நல்லாசிகள்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக