தக்க குரு குறித்து பல்வேறு மனிதர்கள் எம்மிடம் வினவுகிறார்கள். சிலர் வந்து, “என் குரு யார்? எங்கிருக்கிறார்? எந்தக் குருவை நான் பின்பற்ற வேண்டும்?” என்றெல்லாம் கூட கேட்பதுண்டு.
நாங்கள் கூறுவது என்னவென்றால், ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்களைப் போதிக்கின்ற எல்லோரும் குருமார்களே. ஒவ்வொரு அனுபவமும் கூட ஒரு மனிதன் நல்ல விஷயத்தைக் கற்றுக்கொள்ள உதவினால், அதுவும் குருதான்.
எனவே, நாங்கள் பொதுவாகக் கூறுவது என்னவென்றால், குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக் கூடாது. சிஷ்யனைத் தேடித்தான் குரு வரவேண்டும். அந்த அளவிற்கு அந்தச் சிஷ்யன் நடந்துகொள்ள வேண்டும்.
இந்த இடத்தில் ஆழ்வார்கள் கதையை நினைவூட்டிக் கொண்டால் நன்றாகவே புரியும். அந்தப் புளிய மரத்தின் அடியிலே கிடந்த ஆழ்வானைத் தேடித்தான் குரு சென்றார் என்பதை நினைவூட்டிக் கொண்டால், மற்றவை தானாக விளங்கும்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக