வியாழன், 20 ஆகஸ்ட், 2026

துளிகள் - 56 - மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமே அவன் அழிவிற்குக் காரணமா?


இறைவன் படைக்கும்பொழுதே எல்லாவற்றையும் சிறப்பாக, உயர்வாக, எல்லா மனிதர்களும் பேதமில்லாமல் இருக்க வேண்டும் என்று இக்கணம் எண்ணினாலும் எல்லாம் சுபமாக, சுவையாக, எதிர்பார்க்கின்ற விதமாக இருந்துவிடும்.

ஆனால் இறைவன் என்ன செய்தார்?

மனிதர்களுக்கென்று சில சுதந்திரங்களையும், சிந்திக்கக்கூடிய அறிவையும் தந்து, அவனுடைய சுய அறிவால் நன்மை, தீமைகளைப் பிரித்துப் பார்த்து வாழ்ந்துவிட்டு வரட்டும் என்று தந்தால், மனிதன் நன்மையை நாடுவதைவிட, நன்மைக்கு மாறான விஷயங்களை நாடுவதிலே கவனம் செலுத்தி, தன்னையும் கெடுத்துக்கொண்டு, தன் சந்ததியையும் கெடுத்துக்கொண்டு, இந்த உலகத்தையும் கெடுத்துக்கொண்டான்.

ஒரு வகையில் பார்த்தால், மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமே அவன் அழிவிற்குக் காரணமாகிவிட்டது என்று கூட வேடிக்கையாகக் கூறலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!