வெள்ளி, 22 மே, 2026

துளிகள் - 7 - கல்வி அறிவு, ஆன்மீக ஞானம், இயற்கை ஞானம் — மற்றவர்களுக்கு பகிர்வதற்காகவே நமக்கு தரப்படுகிறது!


இறைவன் மற்றும் குருவால் நமக்கு போதிக்கப்படும் கல்வி அறிவு, ஆன்மீக ஞானம் மற்றும் இயற்கை ஞானம் போன்றவை அனைத்தும் நம் வழியாக மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்காகவே நமக்கு கொடுக்கப்படுகிறது.

இதனை உணராமல், “இது எனது, எனக்காக மட்டும், என் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக மட்டும் கொடுக்கப்பட்டது” என்று எண்ணி, அதனை மற்றவர்களுக்கு பகிராமல் பொருள் ஈட்டுவதற்காக மட்டும் பயன்படுத்தினால், அது ஒரு கடனாக மாறும்.

அந்த கடனை கழிப்பதற்காக மீண்டும் ஒரு பிறவி எடுத்து, நாம் பெற்ற அறிவையும் ஞானத்தையும் மற்றவர்களுக்கு பகிர்ந்து அந்த கடனை தீர்க்க வேண்டிய நிலை வரும்.

இக்காலத்தில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரும், முற்பிறவியில் தாங்கள் பெற்ற அறிவையும் ஞானத்தையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்த காரணத்தால், அந்த கடனை கழிப்பதற்காகவே மீண்டும் அந்த ஞானத்துடன் அனுப்பப்பட்டுள்ளனர் என்று அகத்தியப்பெருமான் கூறுகிறார்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வியாழன், 14 மே, 2026

துளிகள் - 6 - நந்தியார் வட்டை பூவின் கண் பார்வை மூலிகை ரகசியம்


நந்தியார் வட்டை பூ, எங்கும் எளிதாக கிடைப்பது, பூக்களிலேயே மிக உன்னதமான மூலிகை சக்தி உடையது என சித்தர்கள் கூறுகிறார்கள். இது கண் பார்வை சம்பந்தமான எந்த குறையையும் (தூரப்பார்வை, கிட்டப்பார்வை, வெள்ளெழுத்து, கண் புரை, குளுகோமா) போன்றவைகளை சரி செய்யும்.

சரி எப்படி உபயோகிப்பது?

நான்கு அல்லது ஐந்து பூக்களை பறித்து, 100 அல்லது 200 மில்லி சுத்தமான தண்ணீரில் போட்டு குறைந்தது மூன்று மணி நேரம் வைத்து இருந்து, பூக்களை அகற்றி அந்த நீரை ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்து, தொடர்ந்து தினமும் காலை ஒரு சொட்டு இரு விழிகளிலும், மாலை ஒரு சொட்டு இரு விழிகளிலும் விட்டு வந்தால், எந்த குறை இருந்தாலும் அது விலகிவிடும். கண்ணாடியை ஒதுக்கி வைத்துவிடலாம், கண் புரை காணாமல் போய்விடும், அறுவை சிகிர்ச்சையை தவிர்க்கலாம்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

புதன், 13 மே, 2026

துளிகள் - 5 - அகத்திய பெருமான் அருளிய மூலிகை பானம்


அகத்திய பெருமான் அருளிய எளிய மருந்து!

1. புதினா இலை - ஒரு பிடி அளவு.
2. கொத்தமல்லி இலை - ஒரு பிடி அளவு.
3. தோல் சீவிய இஞ்சி - ஒன்று.
4. மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்.
5. மிளகு பொடி - அரை ஸ்பூன்.
6. உப்பு - அரை ஸ்பூன் அல்லது தேவைக்கு ஏற்ப.
7. அரை மூடி எலுமிச்சை சாறு.

1 லிருந்து 6 வரை உள்ள பொருட்களை மிக்ஸியில் ஒரு டம்பளர் நீர்விட்டு நன்றாக அரைத்து, எடுத்து, பின் அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து, குடித்தால் எப்படிப்பட்ட ஜலதோஷம், இருமல், தொடர் வரட்டு இருமலும் காணாமல் போய்விடும்! ஒருமுறை குடித்தவுடனேயே பலன் தெரிந்துவிடும். 21 நாட்கள் தொடர்ந்து தினம் ஒருமுறை குடித்து வந்தால் அடுத்த மூன்று வருடங்களுக்கு இருமல் வராது!

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 10 மே, 2026

துளிகள் - 4 - மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று அமைதியின் நேரங்கள்


இன்றைய சித்தர் வாக்கு பதிவில், அகத்திய பெருமான் உரைத்த மனிதன் தினமும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய மூன்று நேரங்களை பற்றி பார்ப்போம்.

முதல் — மனிதன் நீராடும் பொழுது மௌனமாக இருந்து, தனக்கு தெரிந்த மந்திரங்களை மனதுள் ஜபம் செய்ய வேண்டும். இதன் தாத்பரியம் என்னவென்றால், உடலுக்குள் புகுந்த எதிர்வினை சக்திகளை நீர் கழுவி சுத்தம் செய்கிறது. அந்த நீருக்கு மரியாதை செய்யும் விதத்தில் அமைதியாக இருந்து மந்திர ஜபம் செய்வது உடலை மீண்டும் நலப்படுத்தும்.

இரண்டாவது — பூஜை, தவம் போன்றவற்றை செய்யும் போது அமைதியாக இருக்க வேண்டும். மனம் ஒருமுகப்பட வேண்டும். மந்திர ஜபம் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது.

மூன்றாவது — அன்னம் உண்ணும் பொழுது அமைதியாக இருக்க வேண்டும். அன்னத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். உடனிருப்பவர்களுடன் உரையாடுதல் போன்றவை கூடாது. உணவு தொடர்பான தேவைகளைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது.

இந்த மூன்று வழிகளும் மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

சனி, 9 மே, 2026

துளிகள் - 3 - திருவோண நக்ஷத்திரத்தில் செய்ய வேண்டிய மோட்ச பிரார்த்தனை!

இன்றைய தினம் திருவோண நக்ஷத்திரம்.

அகத்திய பெருமான் அருளிய ஒரு உபதேசத்தை நினைவுகூர்வோம்.

ஐந்து அறிவு வரை பெற்ற அனைத்து ஜீவன்களும் மோட்ச நிலையை அடைவதற்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் திருவோண நக்ஷத்திரத்தன்று ஒரு எளிய ஆன்மிகப் பிரார்த்தனையை செய்யுமாறு அகத்திய பெருமான் உத்தரவிட்டுள்ளார்.

சிறிதளவு துளசி, மஞ்சள் பொடி, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் இட்டு, கையில் வைத்து மனமாரப் பெருமாளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்:

“அகத்திய பெருமானின் உத்தரவின் பேரில் இந்த ஜெபத்தை செய்கிறேன். ஐந்து அறிவு வரை பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் மோட்சத்தை கொடுத்துவிடுங்கள்” என்று.

அதன் பின் 108 முறை:

“ஓம் ஶ்ரீ மாய மாலனே நமஹ”

என்ற மந்திரத்தை தியானத்துடன் ஜபித்து, அந்த நீரை பூமியில் அர்க்கியம் இட வேண்டும்.

இதை பித்ரு தர்ப்பணமாக எண்ணக் கூடாது. ஏனெனில் இதில் தர்பை போன்ற சடங்கு முறைகள் இடம் பெறுவதில்லை. இது ஐந்து அறிவு வரை பெற்ற ஜீவன்கள் மோட்சத்தை பெறுவதற்காக அகத்திய பெருமானால் அருளப்பட்ட பிரார்த்தனையாகும்.
 
வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!