இன்றைய தினம் திருவோண நக்ஷத்திரம்.
அகத்திய பெருமான் அருளிய ஒரு உபதேசத்தை நினைவுகூர்வோம்.
ஐந்து அறிவு வரை பெற்ற அனைத்து ஜீவன்களும் மோட்ச நிலையை அடைவதற்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் திருவோண நக்ஷத்திரத்தன்று ஒரு எளிய ஆன்மிகப் பிரார்த்தனையை செய்யுமாறு அகத்திய பெருமான் உத்தரவிட்டுள்ளார்.
சிறிதளவு துளசி, மஞ்சள் பொடி, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் இட்டு, கையில் வைத்து மனமாரப் பெருமாளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்:
“அகத்திய பெருமானின் உத்தரவின் பேரில் இந்த ஜெபத்தை செய்கிறேன். ஐந்து அறிவு வரை பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் மோட்சத்தை கொடுத்துவிடுங்கள்” என்று.
அதன் பின் 108 முறை:
“ஓம் ஶ்ரீ மாய மாலனே நமஹ”
என்ற மந்திரத்தை தியானத்துடன் ஜபித்து, அந்த நீரை பூமியில் அர்க்கியம் இட வேண்டும்.
இதை பித்ரு தர்ப்பணமாக எண்ணக் கூடாது. ஏனெனில் இதில் தர்பை போன்ற சடங்கு முறைகள் இடம் பெறுவதில்லை. இது ஐந்து அறிவு வரை பெற்ற ஜீவன்கள் மோட்சத்தை பெறுவதற்காக அகத்திய பெருமானால் அருளப்பட்ட பிரார்த்தனையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக