விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் "ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே!" என்கிற இரண்டு வரிகளை பத்து முறை சொன்னால், விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும் என்பார்கள்! என்ன காரணம்?
சித்தர்கள் கூற்றின் படி, இந்த இரண்டு வரிகள் உடலை உள்ளிருந்து சுத்தம் பண்ண உதவுகிறது. எப்படி?
இந்த ஸ்லோகத்தை சொல்லும் பொழுது மூக்கின் அடியில் ஒரு விரலை குறுக்காக வைத்துப் பார்த்தால், மூச்சு காற்று மூக்கு வழி வெளியே வராது என புரியும்? அப்படியாயின் என்ன நடக்கிறது.
மந்திரம் கூறும் பொழுது வாய் வழியே உள்ளிருந்து அதிகப்படியான அளவில் வாயு வெளியே செல்கிறது. அதுவும் உடல் உபயோகித்து வெளியேற்றுகிற கார்பன் டை ஆக்சைடு. உடலும் ரத்தமும் சுத்தப்படுத்தப்படுகிறது. இதனால் அனைத்தும் தெளிவாகும்.
மந்திரம் வழி நம் முன்னோர்கள் ஒரு பயிற்சியை எப்படி தலைமுறைக்கு அளித்தார்கள் என்பதற்கு இது ஒரு நற்சான்று
வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக