இறைவன் மற்றும் குருவால் நமக்கு போதிக்கப்படும் கல்வி அறிவு, ஆன்மீக ஞானம் மற்றும் இயற்கை ஞானம் போன்றவை அனைத்தும் நம் வழியாக மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்காகவே நமக்கு கொடுக்கப்படுகிறது.
இதனை உணராமல், “இது எனது, எனக்காக மட்டும், என் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக மட்டும் கொடுக்கப்பட்டது” என்று எண்ணி, அதனை மற்றவர்களுக்கு பகிராமல் பொருள் ஈட்டுவதற்காக மட்டும் பயன்படுத்தினால், அது ஒரு கடனாக மாறும்.
அந்த கடனை கழிப்பதற்காக மீண்டும் ஒரு பிறவி எடுத்து, நாம் பெற்ற அறிவையும் ஞானத்தையும் மற்றவர்களுக்கு பகிர்ந்து அந்த கடனை தீர்க்க வேண்டிய நிலை வரும்.
இக்காலத்தில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரும், முற்பிறவியில் தாங்கள் பெற்ற அறிவையும் ஞானத்தையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்த காரணத்தால், அந்த கடனை கழிப்பதற்காகவே மீண்டும் அந்த ஞானத்துடன் அனுப்பப்பட்டுள்ளனர் என்று அகத்தியப்பெருமான் கூறுகிறார்.
வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக