ஞாயிறு, 10 மே, 2026

துளிகள் - 4 - மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று அமைதியின் நேரங்கள்


இன்றைய சித்தர் வாக்கு பதிவில், அகத்திய பெருமான் உரைத்த மனிதன் தினமும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய மூன்று நேரங்களை பற்றி பார்ப்போம்.

முதல் — மனிதன் நீராடும் பொழுது மௌனமாக இருந்து, தனக்கு தெரிந்த மந்திரங்களை மனதுள் ஜபம் செய்ய வேண்டும். இதன் தாத்பரியம் என்னவென்றால், உடலுக்குள் புகுந்த எதிர்வினை சக்திகளை நீர் கழுவி சுத்தம் செய்கிறது. அந்த நீருக்கு மரியாதை செய்யும் விதத்தில் அமைதியாக இருந்து மந்திர ஜபம் செய்வது உடலை மீண்டும் நலப்படுத்தும்.

இரண்டாவது — பூஜை, தவம் போன்றவற்றை செய்யும் போது அமைதியாக இருக்க வேண்டும். மனம் ஒருமுகப்பட வேண்டும். மந்திர ஜபம் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது.

மூன்றாவது — அன்னம் உண்ணும் பொழுது அமைதியாக இருக்க வேண்டும். அன்னத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். உடனிருப்பவர்களுடன் உரையாடுதல் போன்றவை கூடாது. உணவு தொடர்பான தேவைகளைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது.

இந்த மூன்று வழிகளும் மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக