செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

துளிகள் - 47 - படைத்தவனைப் பழிப்பதைவிட, பாவமற்ற மனதை வேண்டுவோம்!


மாயை சென்று எல்லோரையும் பற்றும் வண்ணம் அந்த உயிர்களின் கர்மவினை இருக்கிறது.

உயிர்களை இறைவன் ஏன் படைத்தான்? படைத்ததால்தானே உயிர்கள் எல்லாம் பாவங்கள் செய்தது? என்ற அடுத்ததொரு வினாவை ஏற்கனவே இவன் கேட்டிருக்கிறான்.

அதாவது ஏகன், ஏகனாகவே இருந்துவிட்டால் பிறகு பிரச்சினையே இல்லையே? ஏகன் எதற்கு அநேகனாக மாறினான்? என்று இவன் கேட்கிறான்.

ஏகன், அநேகனாக மாறுவதற்கு முன்னால் அந்த ஏகனைப் பார்த்து யாராவது ஒருவர், ‘நீ இப்படியே இரு. பல்கூறுகளாகப் பிரியாதே’ என்று கூறியிருக்கலாம். ஆனால் அங்குதான் அப்படிக் கூறுவதற்கு யாருமில்லையே? அப்படி யாராவது கூறவேண்டும் என்பதற்காகவாவது ஏகன், அநேகன் ஆகியிருக்கலாம் அல்லவா?

எனவே, ‘என்னை எதற்காகப் படைத்தாய்? படைத்ததால்தான் பாவங்கள் செய்தேன்’ என்று கூறுவதைவிட, ‘நான் பாவங்கள் செய்யாமல் இருக்கும் வண்ணம் என் மனநிலையை அமைத்துக்கொடு’ என்று பிரார்த்தனை செய்வது சிறப்பு.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக