தாவர இனங்களை உண்பதால் பாவம் வராது என்று நாங்கள் கூறவில்லை. குறைந்தபட்சம் பாவம் வரத்தான் செய்யும். அதனால்தான் பிறவியே வேண்டாம் என்று இறைவனிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
மனிதனாகப் பிறவியெடுத்துவிட்டாலே எத்தனைதான் நேர்மையாக வாழ்ந்தாலும், தவிர்க்க முடியாமல் சில பாவங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.
எனவேதான் அதனையும் தாண்டி பலகோடி மடங்கு புண்ணியத்தைச் செய்தால் இந்தப் பாவம் நீர்த்துப் போகும். ஆனால் முன்னர் சொன்ன உயிர்க்கொலை பாவங்கள் நீர்த்துப் போகாது, அவ்வளவே.
மன்னிக்கக்கூடிய பாவம், மன்னிக்கவே முடியாத பாவம் என்று எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன. சில தவிர்க்க முடியாத பாவங்கள் இறையால் மன்னிக்கப்படலாம். சில பாவங்கள் இறையால் மன்னிக்கப்பட மாட்டாது.
எனவே, தெரிந்தும் எதற்கு ஒரு மனிதன் மன்னிக்கப்படாத பாவங்களைச் செய்ய வேண்டும்?
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக