சனி, 4 ஜூலை, 2026

துளிகள் - 20 - இறப்புக்குப் பின் செய்யப்படும் சடங்குகளின் உண்மையான நோக்கம்!


ஒரு மனிதன் இறந்துவிட்டால் செய்ய வேண்டிய கடமைகளை, சித்தர்கள் நாங்கள் வகுக்கவில்லை. உடலைப் பிரிந்த ஆத்மா, உடலை விட்டதை அறியாமல், மிகுந்த குழப்பத்துடன் அலையும். அதற்கு தனது நிலையை உணர்த்துவதற்காகவே இச்சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன.

இளம் வயதுடையவர் ஒருவர் இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்தில் மிகுந்த அளவில் வருத்தம் சில நாட்கள் இருக்கும். மனவருத்தத்துடன் கோவில்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே முன்காலத்திலிருந்து தடைகளை வைத்திருக்கிறார்கள். நன்றாக வாழ்ந்து, அதிக வயதில் ஒருவர் இறந்தால் அந்தக் குடும்பத்தில் மனவருத்தம் மிகக் குறைந்த நாட்களே இருக்கும். பின்னர் அவரவர் தங்கள் பொறுப்பை நோக்கி நகர்ந்து விடுவார்கள்.

வருத்தம் இல்லை என்றால் கோவிலுக்குச் செல்லலாம் என்பதை உணர்த்துவதற்கே, ஒருவர் இறந்த பின் அந்தக் குடும்பத்தினர், அவரவர் பிரிவின்படி 13 அல்லது 16 போன்ற நாட்களில் கோவிலுக்குச் சென்று வரும் நிகழ்ச்சியைச் சேர்த்துள்ளார்கள். கோவிலுக்குச் சென்று ஸ்வாமியை தரிசிக்கும் பொழுது வேண்டுதல்கள் வைக்கலாம்; தவறில்லை. ஆனால் மனதில் வருத்தம் இருக்கக்கூடாது. வருத்தத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட மன அமைதி இருக்கலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக