சனி, 18 ஜூலை, 2026

துளிகள் - 27 - பிறருக்காகப் பிரார்த்திப்பவன், இறையருளின் பாதையை அடைவான்!


நாடி மீது நம்பிக்கை வந்து, தர்மத்தின் மீது நாட்டம் வந்து சத்தியத்திலும் பிடிப்பு வந்தால், இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் ஜீவ அருள் ஓலை மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும் என்று யாம் எண்ணினாலும், எம்மைப் பொருத்தவரை ஒருவன் தீய வழியில் சென்றாலும், நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல் வழிப்படுத்த வேண்டியது எமது கடமை என்றாலும் இறைவன் அனுமதித்தால் நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிரார்த்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மனிதர்களுக்கு புண்ணியம் சேர்த்துக்கொள்ள எத்தனையோ வழிகளை இறைவன் அளித்துள்ளான். அதில் ஒன்று பிறருக்கான பிரார்த்தனை. முகம் பாராமல் பிறர் துன்பங்களுக்கு பிரார்த்திப்பவன், விரைவில் எங்கள் அருகில் வருவான். யாமும் வழிநடத்துவோம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக