இறைவனைக் காண வேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் மனதினுள் இருக்கும். இப்படிப்பட்ட ஆசையை இறைவனிடம் பிரார்த்தனையாக வைக்கும்பொழுதே, "இறைவா! நீ என்னை ஆட்கொண்டுவிடு. எப்படி என்றால், நீ வேறு, நான் வேறு என்று இல்லாமல், நதியானது தனியாக இருக்கும்பொழுது நதியாகவும், கடலில் சேர்ந்த பின் கடலாகவும் மாறிவிடுவது போல, என்னை நீ ஆக்கிவிடு. அந்த இடத்தில் இது நதி, இது கடல் என்று பிரிக்க முடியாது. அதுபோல என்னை நீ ஆக்கிவிடு" என்ற பிரார்த்தனையை இறைவனிடம் வைத்தாலே போதும். இறைவன் நிச்சயம் அனைவருக்கும் அருளுவார்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக