நான் சரியாகத்தான் இருக்கிறேன். நான் நேர்மையாகத்தான் நடக்கிறேன். நான் ஒழுங்காகத்தான் எல்லாவகையிலும் வாழ்கிறேன். ஆனாலும் துன்பம் தொடர்கிறது என்றால், ஒன்று இன்னமும் பூர்வீக பாவங்கள் குறையவில்லை என்பது பொருள். அஃதோடு சேர்ந்து, தற்காலத்திலும் அறிந்தும், அறியாமலும் இன்னும் பாவங்களைச் செய்துகொண்டிருக்கிறான் என்றும் பொருளாகும்.
எனவே, அவனவன் தன் மனசாட்சியின்படி, தன்னுடைய நேர்மையைக் கொஞ்சம்கூட ஒதுக்கி வைக்காமல், தன்னைத்தானே ஆய்வுசெய்து பார்த்தால், எங்கே தவறு இருக்கிறது? என்றும், ஏன் வாக்குகள் வரவில்லை? என்பதும் அவனவனுக்கே புரிய வரும்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக