ஒருவனுக்கு ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றால், அவனுக்கு, சித்தர்கள் மீதும், இறைவன் மீதும் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவனுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு வழியாக உள்புகுந்து செய்தியை அவனுக்கு தெரிவித்து விடுவோம். அதற்கு, ஓலைச்சுவடியோ, நேரில் தோன்றவேண்டும் என்பதோ தேவை இல்லை!
எனவே, ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தால், இறைவனுக்கு பிடிக்குமோ, அதை கண்டுபிடித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், எங்கள் தரிசனமும், அருகாமையும் இயல்பாக கிடைக்கும். அனைத்தும் ஒரு மனிதன் நடந்து கொள்வதில்தான் உள்ளது.
வாக்குரைத்தவர் அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக