நல்ல கர்மாக்களின் எதிரொலியால் விளைகின்ற நல்ல விஷயங்களை மனிதன் அனுபவித்து போகட்டும் என்று இறைவன் உத்தரவிட்டாலும், அவன், அதிலேயே ஒட்டி நின்று ஆன்ம வழியை காணாமல், இகபர விஷயங்களுடன் ஒட்டிக்கொண்டு விடுகிறான். ஆகவே, சிறப்பாக இருந்தவனைக் கூட சில நேரங்களில் யாங்கள் கீழே இறக்க வேண்டி உள்ளது. மனம் பக்குவம் அடைவது என்பது அத்தனை எளிதல்ல. மனிதன் எப்பொழுது, மிக விரும்பி அடைந்த விஷயத்தை கூட வேண்டாம் என விலக்கி வைக்க தொடங்குகிறானோ, அந்த நொடி முதல் எங்கள் பாதையில் நடக்க தொடங்கிவிட்டான் என்று பொருள்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக