தினமும் வீட்டில் இரண்டு நேரம் விளக்கேற்ற வேண்டும் — ஒன்று காலை, மற்றொன்று மாலை. விளக்கினை ஏற்ற தீக்குச்சியை உரசி அக்னியை உருவாக்கியதும், அனைத்து தெய்வங்களின் பார்வை படும் படி காட்டிவிட்டு, மனதுக்குள் "உங்கள் பார்வை பட்ட அக்னிதான் விளக்கில் ஜொலிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்துக்கொண்டு, 'ஓம்' என்று கூறி திரிக்கு அக்னியை தரவேண்டும். இவ்வாறு விளக்கினை ஏற்ற வேண்டும்.
அதேபோல் விளக்கினை அணைக்கும் போது 'ஓம்' என்று கூறிகொண்டே திரியை எண்ணெய்க்குள் இழுத்து விட வேண்டும். கையால் அணைப்பதோ அல்லது ஊதி அணைப்பதோ கூடாது.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக