இவ்வுலகில், ஏமாறுகிறவன், ஏமாற்றுகிறவன் என இரண்டு வகை மனிதர்களும் உண்டு. அதிலும் தெரிந்தே ஏமாறுகிறவன் சிறந்த பாக்கியசாலி. எப்படி? ஒருவன் அவனுக்கு விதிக்கப்பட்ட கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும். ஆயினும், ஒருவன் ஏமாற்றப்படும் பொழுது, ஏமாறுகிறவன் உணர்ந்தே இழந்தால், அவனை விட்டு நிறைய கர்மாக்கள் ஏமாற்றுகிறவன் கைக்கு போய்விடும். ஏமாற்றியவன், அதை சுமந்து வருந்தி, இன்னும் நிறைய ஜென்மாக்கள் எடுத்து, எப்படி இந்த கர்மாவை கழிப்பது என்று தெரியாமல் தவிப்பான். இது, இழப்பவன், உணர்ந்த நிலையில் மட்டும்தான் சாத்தியம். உணர்ந்தே இழக்கும் பொழுது, இழப்பவனுள் சாட்சி பூதமாக இறைவனே இறங்கி நின்று கொண்டிருப்பான். ஆகவே, ஏமாற்றுபவன் தப்பிக்கவே முடியாது!
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக