செவ்வாய், 9 ஜூன், 2026

துளிகள் - 12 - ஆட்டிசம் குறைபாடும் ஆன்மீக பரிகாரமும்


மனிதர்கள் செய்கின்ற தவறுகளுக்கு ஏற்ப, அடுத்த பிறவியில் அவர்களுக்கான தண்டனை வியாதியாகவோ, உடல் குறைபாடுகளாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையிலோ இறைவனால் வழங்கப்படுகிறது.

ஆட்டிசம் (Autism) எனப்படும் குறைபாடு தற்போது பல குழந்தைகளைப் பாதித்து, அவர்களது பெற்றோருக்கு மனவேதனையை அளித்து வரும் சூழ்நிலை காணப்படுகிறது.

இதில் முக்கியமாக, இந்த குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்று பார்க்கும்போது, சில தவறுகளுக்கான தண்டனைகள் குறித்து தர்ம சாஸ்திரங்களில் குறிப்புகள் கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில ஆத்மாக்கள் செய்த தவறுகளை ஒரு குறிப்பிட்ட தண்டனையின் கீழ் வகைப்படுத்த முடியாத சூழ்நிலையில், பலவிதமான தவறுகளின் விளைவாக இத்தகைய நோய்கள் அல்லது குறைபாடுகள் இறைவனால் வழங்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

பூர்வ ஜென்மத்தில் செய்த தவறுகள் என்னவென்று புரியாத நிலையிலும், தாங்கள் எவ்வாறு வாழ்கிறோம் என்பதையும் முழுமையாக உணர முடியாத நிலையிலும், பெற்றோர்களுக்கும் இத்தகைய குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற விதி அமையும்போது, இவ்வாறான வாழ்க்கை அமைந்து விடுகிறது.

மருத்துவ ரீதியாக பல சிகிச்சை முறைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், ஆன்மீக ரீதியாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் நடராஜ மூர்த்தி ஆகிய மூன்று தெய்வங்களையும் வீட்டில் வைத்து தினமும் வழிபட்டு வந்தால், இந்த ஆட்டிசம் குறைபாடுகள் மெதுவாக நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக