கோவில் மற்றும் பெரியவர்களோட சமாதி போன்ற இடங்களில் உள்ளே செல்ல முயற்சிக்கும் போது ஒருவருக்கு தாகம், பசி போன்ற உணர்வுகள் திடீரென தோன்றினால் அது ஒரு நிமித்தம். அங்கு இருக்கும் சக்தியானது, "என்ன வேண்டுமோ கேள், உனக்கு ஆசீர்வதிக்க காத்திருக்கிறேன்" என்று சுட்டிக்காட்டுகிற நிமித்தமாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த நேரத்தில் வைக்கக்கூடிய பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேறும். இந்த உணர்வும் தெளிவும் ஒரு மனிதனுக்கு இருக்க, அவன் நடந்து செல்கிறான் என்றால் மேலும் ஆன்மீகத்தினுடைய படிகளில் முன்னேறுவதற்கு அது அவனுக்கு வழியைக் காட்டும்.
மிக உயர்ந்த நிலையில் உள்ள பெரியவர்கள் இந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும் பொழுது, "இறைவா, நீ இருக்கிறாயே, அது ஒன்றே எனக்குப் போதும்" என்று பிரார்த்தனையை கொடுத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக