நலம் உண்டாகும். நமசிவாயம். நன்னெறியான வாழ்வின் பயணத்தில் பல பிறவிகள் புண்ணிய செயல்கள் செய்து இறைவனின் திருவுள சம்மதம் படி உலகோர்க்கு தொண்டு செய்து உள்ளொளி விளங்கும் பாக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே.. அம்பிகை அருளால் ஆறுமுகத்தின் அருள் வாய்க்கப் பெறும். பேரியக்கத்தின் அருளாணை இருத்தலும், அவசியம் ஆகிறது.. பரம் பொருளின் வடிவான சிவம் வேறு அல்ல அங்கிருந்து வெளிப்பட்ட ஆறுமுகம் வேறு அல்ல என்ற தெளிவும் வேண்டும்.. கருணாமூர்த்தி ஆக மனம் விளங்குவதும், மெய்யை காப்பதும், இன்ப துன்ப நிலைகளிலும் மனம் சமநிலையில் இருத்தலும், மெளன மொழியில் அகத்தில் அனுபூதியை பெறுதலும் உணர்வின் கண் கொண்டு வைரம் போன்ற நெஞ்சுருதி வாழ்தலும், பிறவிப்பிணி அகற்றி அகத்தே ஆறுமுக சிவத்தை அருள செய்யும். உண்பதும், உறங்குவதும், பொருள் தேடுவதும் வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்து வேலவனை வணங்குவதை வேலையாக கொண்டு அவன் தன் பணியை உணர்ந்து செய்து வந்தாலே போதும் அப்பனே!! உள்ளும் புறமும் சிவமாக நல் ஆசிகள்!
வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக