செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

துளிகள் - 50 - இறை நீதியை உணர, பாவங்களைக் கழிப்பதே முதல் படி!


இறை நீதி என்ற கொள்கை குறித்தும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் ஒரு மனிதன் இதுவரை சேர்த்த பாவங்களையெல்லாம் அனுபவித்துத் தீர்க்க வேண்டும் அல்லது கூடுமானவரை தான, தர்மங்களாலும், வழிபாட்டாலும், வேறு ஸ்தல யாத்திரைகளாலும் தீர்க்க வேண்டும்.

பாவங்கள் கடுகளவு இருந்தாலும் கூட பரிபூரணமாக இறைவனைப் புரிந்துகொள்ள முடியாது.

எனவே, இறைவனைப் புரிந்துகொள்ளவோ அல்லது இறை நீதியைப் புரிந்துகொள்ளவோ அல்லது முக்தி போன்ற நிலையை அடைவது குறித்தோ ஆய்வு செய்வதற்கு முன்னால், முதலில் உலகியல் ரீதியான கடமைகளை நேர்மையாக ஆற்றிக்கொண்டே, சேர்த்த பாவங்களையெல்லாம் நல்லவிதமாகக் கழித்து, தர்மத்தால் குறைத்துக்கொண்டே வந்தால், தாராளமாகப் பாவங்கள் குறையக் குறைய, அனைத்தும் உள்ளத்தில் தெள்ளத் தெளிவாகப் புலப்படத் துவங்கும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக