நன்றாக கவனிக்க வேண்டும், எந்த தேசத்திலும் அதிகாலை எழுந்து வீட்டு வாசலைப் பெருக்கி கோலமிடும் பழக்கம் இல்லையப்பா. இங்கு பாரதத்தில்தான் இருக்கிறது.
சுத்தத்தை ஆதியில் மனித குலத்திற்குப் போதித்த இடமே இந்த பாரத மண்தானப்பா. அப்பேற்பட்ட மண் இப்பொழுது அசுத்தமாக இருக்கிறது. காரணம், இங்குள்ள மனித மனம் அசுத்தமாகிவிட்டது.
முதலில் மனித மனம் சுத்தமானால், இந்த தேசம் சுத்தமாகும். தேசம் சுத்தமானால் தீங்கு தரும் சிறு உயிர்கள் (கொசு, விஷ ஜந்துக்கள்), சிறிய உயிரினம் இங்கு இல்லாத நிலையை இறைவன் உருவாக்குவார்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக