புதன், 19 ஆகஸ்ட், 2026

துளிகள் - 54 - மனிதப்பிறவியின் நோக்கம் — புலன் வாழ்வைத் தாண்டி இறைநோக்கிப் பயணிப்பதே!


வினைகளின் கூட்டுத் தொகுப்பான பிறவிகளில், மனிதப்பிறவி விலங்கான பிறவிகளிலிருந்து சற்றே கடுகளவு மேம்பட்டது என்றாலும், மேலும் மேம்பட சற்றே முயலாமல், அந்த விலங்குத் தன்மையை மட்டும் கொண்டு, உணர்வுகளுக்கு ஆட்பட்டு, உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்கின்ற தன்மையே பெரும்பாலான மனிதர்களிடம் நிலவி வருகிறது.

இறைவனின் கருணையைப் பெறவும், மேலும் மேலும் இறை நோக்கிப் பயணம் செய்யவும், பாவங்களைச் சேர்க்காத வாழ்க்கை வாழவும், சேர்த்த பாவங்களைக் கழிக்கவும் மட்டுமே மனிதப்பிறவி என்பதை ஒரு மனிதன் புரிந்துகொள்ளவே பல பல பிறவிகள் ஆகிவிடுகின்றன.
அவன் புலன்களால் கண்டு, கேட்டு, உணரக்கூடிய வாழ்க்கை முறையை நுகர்வதே வாழ்க்கை என்று எண்ணுகின்ற தன்மையில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஆதலால், புலன் வாழ்வைத் தாண்டி மேலான வாழ்வு நிலையை நோக்கிச் செல்வதற்குக் கொடுக்கப்பட்ட பிறவியை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள, கூடுமானவரை முயற்சி செய்வதே ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக