எமை நாடிய ஆத்மா பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக இந்தப் பிறவியிலே இப்படியொரு சிக்கலில் இருக்கிறது. இந்த ஆத்மாவை மன்னித்து இந்த ஆத்மாவிற்கு நல்லதொரு வழியைக் காட்டவேண்டும் என்றுதான் யாமும் பிரார்த்தனை செய்து அந்த இறைவனிடம் முழு சரணாகதி செலுத்தி, அந்த பரந்த பரம்பொருள் எதை உணர்த்துகிறதோ அதை எமை நாடுகின்ற மனிதர்களுக்கு உணர்த்துகிறோம். ஆயினும் கூட ஒரு துன்பம் வந்த உடனேயே சட்டென்று விழி மூடி விழி திறப்பதற்குள் அந்த துன்பம் போய்விடாதா ? என்ற ஏக்கம்தான் மனிதனிடம் இருக்கிறது. கடுமையான பாவவினைகளின் காரணமாகத்தான் ஒரு மனிதனுக்கு கடும் வியாதியும், கடுமையான தன சிக்கலும், ருணமாகிய கடனும், கடும் பொருளாதார நெருக்கடியும், உறவு சார்ந்த சிக்கல்களும் இன்னும் பிற துன்பங்களும் வருகிறது. எனவே ஒரு மனிதன் தன் வாழ்வியல் முயற்சிகளோடு பரிபூரண சரணாகதி பக்தியையும் வளர்த்துக்கொண்டால் கட்டாயம் மெல்ல, மெல்ல அவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து வெளியே வரலாம்.
வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக