‘பித்ரு’ என்ற சொல்லுக்கு முன்னோர்கள் என்ற பொருள் உண்டு.
ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து, வாழ்க்கையை முடித்துக்கொண்ட முன்னோர்கள் சேர்த்து வைத்த பாவம், அவர்கள் பெற்ற சாபம், அந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய நீர்க்கடனை செய்யாது விட்டதால் அவர்களால் வரக்கூடிய தோஷம் என்று பல்வேறு விதமான தோஷங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் பீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த பித்ரு தோஷத்தின் அடுத்த உயர்வான நிலைதான் “பிரம்மஹத்தி தோஷம்”. இதன் கிளைதான் “நாகதோஷம்”.
எனவே, இவையெல்லாம் உச்சகட்ட பாவத்தின் குறியீடுகள்தான். நாகதோஷம் என்றால் ஏதோ நாகப்பாம்பைக் கொன்றால் வரும் தோஷம் என்பது ஒரு தவறான நிலையாகும்.
எல்லா வகையான உச்சகட்ட பாவங்களின் ஒரு அடையாளம்தான் இதுபோன்ற தோஷங்களின் நாமகரணங்கள். நாமகரணங்களை விட்டுவிட்டு, உச்சகட்ட பாவங்கள் வாழ்க்கையில் பின்னிக் கலந்திருக்கின்றன.
அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டாலே, முதலிலே காலபைரவர் வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.
அடுத்ததாக, பசுக்களை நல்ல முறையில் பராமரிக்கின்ற ஒரு நிலைக்கு தன் மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, பாழ்பட்ட ஆலயங்களுக்குச் சென்று முடிந்த தொண்டுகளைச் செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு தினத்திற்கு உச்சிப் பொழுதிற்குள் ஒரு ஏழைக்காவது அன்னமிட வேண்டும்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக