ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

துளிகள் - 46 - இரத்த பந்தம் இல்லாதவர்களுக்கு உதவினால் பாவங்கள் விரைவில் குறையும்!


தாய், தந்தையைப் பேணவேண்டும் என்ற நோக்கிலே, தாய், தந்தையை மதிக்கவேண்டும், போற்றவேண்டும் என்பதற்காக அவ்வாறெல்லாம் எல்லா புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது.

அதே சமயம், உடன் பிறந்தவர்களையும் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்டிருக்கிறது. அதற்காக மற்றவர்களுக்கு உதவக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை.

என்னதான் இரத்த பந்தம் உடையவர்களுக்கு உதவ வேண்டியது கடமை என்றாலும், இரத்த பந்தம் இல்லாதவர்களுக்கு உதவும் பொழுதுதான் விரைவில் பாவங்கள் குறைகின்றன.

எனவே, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டியது மனிதனுக்கு அத்தியாவசியமான கடமை. அந்தக் கடமையிலிருந்து அவன் தவறினால், கடமை தவறிய குற்றம், பாவம் வந்து சேரும்.

இரத்த தொடர்பில்லாதவர்களுக்கு உதவி செய்யாவிட்டால் புதிதாக பாவம் வராது. ஆனால் சேர்த்த பாவம் தீராது, புண்ணியமும் சேராது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக