அதிதியாக வரக்கூடிய மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், தேகமெங்கும் அழுகியிருந்தாலும், அருவருக்கத்தக்க தோற்றம் இருந்தாலும், அவனை அழைத்து அவன் பாதத்தை நன்றாக நீரால் நனைத்து, பாதபூஜை செய்து, அவனை இல்லத்தில் அமரவைத்து, ஒரு உயர்ந்த மகானோ, ஞானியோ வந்தால் என்ன மரியாதையை மனிதன் செய்வானோ, அப்படிச் செய்து இன்முகத்தோடு உணவிடுவதே பரிபூரண அன்ன சேவையாகும்.
ஏதோ ஒரு அன்னத்தை வாங்கினோம். "இந்தா! பிடித்துக்கொள்" என்று கொடுப்பதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும், "இப்படியாவது செய்கிறார்களே சேய்கள்?" என்று நாங்கள் சற்றே மனம் மகிழ்ந்து இருக்கிறோம்.
இப்படி ஒவ்வொரு நாளும் செய்து வந்தாலும், இந்த பித்ரு தோஷங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவே, இது ஒரு மனித வாழ்க்கையில் எல்லாவகையான பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. செய்தொழில் விருத்தியில்லாமலும், குடும்பத்தில் குழப்பமும், அதிக மருத்துவச் செலவினங்களை ஏற்படுத்திக்கொண்டு, நோய் ஒன்று போய் ஒன்று என்று வந்துகொண்டே இருப்பது போல, எல்லாவற்றையும் தாண்டி மனக்கிலேசமும், சித்தப்பிரமையும் குடும்பத்தில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
எனவே, எளிய வழிபாடுகளையும், தர்மகாரியங்களையும் செய்து, ஒரு மனிதன் இந்த தோஷத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வர வேண்டும்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக