எல்லாவகையான பூஜைகளுக்கும் அடிப்படை ஒழுக்கம் அவசியம். பூஜைகளே செய்யாவிட்டாலும் போதும். ஒரு மனிதன் ஒழுக்கமாக, நேர்மையாக வாழ்ந்தாலே அதுவே ஒரு பூஜைதானப்பா.
‘பூஜை செய்கிறேன்’ என்று ஒருவன் பிறரை இடர்படுத்துவதோ, தன்னை இடர்படுத்திக் கொள்வதோ அல்ல.
எனவே, மனோரீதியாக ஒருவன் மனிதநேயத்தை வளர்த்துக்கொண்டு, மனதைச் செம்மைப்படுத்த, மனதை வைராக்யப்படுத்த, மனதை வைரம்போல் உறுதிப்படுத்தத்தான் பூஜைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன.
ஆனால் அந்தப் பூஜையைச் செய்து, அதனால் மனச்சோர்வுதான் மிச்சம் என்றால், அவன் அந்தப் பூஜையையே செய்யத் தேவையில்லை.
எனவே, சரியான வழிமுறை என்பதைவிட ஒரு மனிதனின் மனநிலைதான் அங்கே முக்கியம்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக