ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

துளிகள் - 45 - இறைவன் அருளால் கருடபுராணத்தை அனுதினமும் ஓதலாம் — தவறேதுமில்லை!


இறைவன் அருளால் கருடபுராணத்தை அனுதினமும் ஓதலாம், தவறேதுமில்லை. இது அனுதினமும் ஓதப்பட்ட விஷயம் அல்ல என்பது மனிதனின் அறியாமையால் ஏற்பட்ட ஒன்று.

மனிதன் உடலை விட்ட பிறகு அவனுக்கு கருடபுராணம் ஓதி என்ன பயன்? உடலோடு இருக்கும்பொழுது கருடபுராணம் ஓதினால்தான், இப்படியெல்லாம் வாழ்ந்தால் இப்படி தண்டனைகள் கிடைக்கும். இப்படியெல்லாம் வாழக்கூடாது என்ற கருத்தை புரிந்து கொள்வான்.

ஆனால் மனிதனுக்கு கிட்டிய கருடபுராணம் குறைந்த அளவே. அதுவும் இடைச்செருகல்களோடு கிடைக்கப்பட்டிருக்கிறது.

அதே போல் நரகம், சொர்க்கம் என்பது உண்மை. அது ஒருபுறம் இருக்கட்டும். இப்பூலோகமே நல்ல எண்ணம் கொண்டவனுக்கு, புண்ணிய ஆத்மாவிற்கு சொர்க்கமாகவும், அப்படியில்லாதவனுக்கு நரகமாகவும் தோன்றுவது உண்மையே.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக