சொந்த வீடு அமையா தோஷம் விலக, முதலில் ஆத்மா குடியிருக்கும் தேக வீட்டை நன்றாக ஒரு மனிதன் பராமரிக்க வேண்டும்.
ஒரு பிறவியிலே பெற்ற புண்ணியத்தால் பல்வேறு இல்லங்களைப் பெறக்கூடிய வாய்ப்பு பல்வேறு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அப்பொழுது அந்த ஆணவத்தால் பலரை இடர்ப்படுத்திய பாவம்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்லதொரு சுகமான இல்லம் அமையாமல் ஒரு மனிதன் வேதனைப்பட நேரிடுகிறது.
எனவே, இதுபோன்ற கடுமையான மனைதோஷம் அடையப்பெற்ற ஜாதகர்கள், அவர்கள் விருப்பம்போல் இறை வழிபாட்டை செய்வதோடு, குறிப்பாக செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வணங்கி, நவகிரகங்களில் உள்ள செவ்வாய்க்கும் முடிந்த பிரார்த்தனைகளை செய்துகொண்டே இருப்பதும், கூடுமானவரை மனைதோஷங்கள் குறைவதற்கு முடிந்தவரை தர்மங்களை, குறிப்பாக சிறிய அளவு மனையையாவது ஒரு ஏழைக்கு தானமாக அளித்தால், கட்டாயம் இந்த தோஷம் விலகுமப்பா.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக